Tuesday, March 20, 2018

#ஈசன் காட்சி  அளித்த தலங்கள்

1, திருவையாறு –

ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.

2, முக்கீச்சுரம் –

உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.

3, திருபூந்திருத்தி –

 நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.

4, திருவீழிமிழலை –

 சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.

5, கீள்வேளூர் –

 கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல்.

6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை –

 மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.

7, கொட்டையூர் –

சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.

8, திருநல்லூர் –

அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.

9, திருவாவடுதுறை –

 முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.

10, அச்சிறுப்பாக்கம் –

 திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.

11, கஞ்சனூர் –

 பிரம்மனுக்கு திருமண காட்சி.

12, வடதிருமுல்லைவாயில்

 – தொண்டமானுக்கு காட்சி.

13, திருவையாறு –

காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.

14, குடவாயில் –

திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.

15, கைச்சினம் –

 சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.

16, திருப்புறம்பியம் –

 கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.

17, கொள்ளம்புதூர் –

 சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.

18, திருப்பைஞ்சிலி –

 வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.

19, திருக்கானப்பேர் –

 இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.

20, கடம்பந்துறை –

கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.

21, திருக்கண்டியூர் –

 சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.

22, திருக்கானூர் –

 உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.

23. திருவலம்புரம் –

ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.

24. திருத்தினைநகர் –

 பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.

★நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம்

★ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி

★நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி

★நந்தி நின்ற தலம் : திருமால்பேரு

★நந்தி திருமண தலம் : திருமழபாடி

★நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி

★நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

ஓம் நமசிவாய.

சிவஇளையா

No comments:

Post a Comment